Monday, June 18, 2012

மதிய உணவு தந்த காமராஜரே


மதிய உணவு தந்த மன்னவரே 
எனமதியில் மதியாய் ஒளிர்பவரே ;
அறிவு பசியை தூண்டி  எழுப்ப
வயிற்று பசியை பசியை கலைந்தவரே;
காவி அணியா துறவியரே  வெள்ளை 
சட்டை அணிந்த காந்தியாரே; 
ஏற்றத் தாழ்வை எங்கும் நீக்க
இறுதி வரையிலும் உழைத்தவரே; 
ஏற்ற பதவியின் புனிதம் காக்க 
உறுதியை நேர்மையாய் இருந்தவரே; 
உங்கள் உருவம் காட்ட கரும் 
பலகை கருமையாய் இருக்கிறதோ! 
உங்கள் உள்ளம் காட்ட அதில் 
வெள்ளை எழுத்துக்கள் பிறக்கிறதோ! 
கெப்ளரும் நியுட்ட்னும் தெரியவிலை கடும் 
பசியால் மூளைக்கு புரியவில்லை ;
எங்கள் பிணிதிர வந்திரே மதியம் 
வயிற்றுக்கு உணவு தந்திரே ;
பாதம் பணிகிறோம் பெரியவரே -மதிய 
உணவு தந்த காமராஜரே .
                                                            by -*முத்தமிழ் *

No comments:

Post a Comment