மதிய உணவு தந்த மன்னவரே
எனமதியில் மதியாய் ஒளிர்பவரே ;
அறிவு பசியை தூண்டி எழுப்ப
வயிற்று பசியை பசியை கலைந்தவரே;
காவி அணியா துறவியரே வெள்ளை
சட்டை அணிந்த காந்தியாரே;
ஏற்றத் தாழ்வை எங்கும் நீக்க
இறுதி வரையிலும் உழைத்தவரே;
ஏற்ற பதவியின் புனிதம் காக்க
உறுதியை நேர்மையாய் இருந்தவரே;
உங்கள் உருவம் காட்ட கரும்
பலகை கருமையாய் இருக்கிறதோ!
உங்கள் உள்ளம் காட்ட அதில்
வெள்ளை எழுத்துக்கள் பிறக்கிறதோ!
கெப்ளரும் நியுட்ட்னும் தெரியவிலை கடும்
பசியால் மூளைக்கு புரியவில்லை ;
எங்கள் பிணிதிர வந்திரே மதியம்
வயிற்றுக்கு உணவு தந்திரே ;
பாதம் பணிகிறோம் பெரியவரே -மதிய
உணவு தந்த காமராஜரே .
by -*முத்தமிழ் *